அரசுப் பணிகளுக்காக, பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் மிக எளிமையானது – சந்தேகத்துக்கு இடமில்லாமல், குரூப்-4 தேர்வுதான். ஊக்கப்படுத்துவதற்கோ, உற்சாகம் கொடுப்பதற்கோ, இப்படிச் சொல்லவில்லை. உண்மையே இதுதான். பத்தாம் வகுப்பு அளவில்தான் கேள்விகள் வரும் என்பதனால் மட்டுமல்ல; அநேகமாக, தேர்வுக்கான பாடத் திட்டம் (’சிலபஸ்’) மொத்தமும் தந்து, அதில் இருந்தே பெரும்பாலான கேள்விகள் கேட்பது, ’டி.என்.பி.எஸ்.சி.’ தேர்வுகளில் மட்டுமே தென்படுகிற அதிசயம். மற்ற பல போட்டித் தேர்வுகளில், ‘சிலபஸ்’ என்று தரவே மாட்டார்கள். நாம்தான் ‘கண்டதையும்’ படித்துக்கொண்டு போக வேண்டும். எதில் இருந்து எது மாதிரியான கேள்வி வரும் என்பதே தெரியாமல், தேர்வுக்குத் தயார் ஆவது எப்படி….? இதுதான் ‘சிலபஸ்’; இங்கிருந்துதான் கணிசமான கேள்விகள் வரும் என்று தெரிந்து தயார் செய்வது எப்படி….? டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, இரண்டாம் வகையைச் சேர்ந்தது. யாருக்கெல்லாம், குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்று தீராத ஆசை இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் செய்ய வேண்டிய முதல் முக்கிய பணி – (வழி